நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், பராமரிப்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் இன்றும் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி பிற்பகல் 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது




