மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி யாழில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சி வெளியாகியுள்ளது.
குறித்த சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகையினால் அத்துடன் இப்பகுதியில்வீதிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட வேண்டுமெனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



