மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணல்காடு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தால் ஊடகங்களுக்கு இன்று விடுக்கப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 27 வயதுடையவர் என்பதுடன் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



