அனுராதபுரம், கொன்வேவ பகுதியில் குடும்ப சுகாதார ஊழியர் ஒருவரின் வீட்டின் முன் ஒரு மாதப் பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மஹாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப சுகாதார ஊழியர் இந்திராணி அனுலாவின் வீட்டின் முன் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த கதிரையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் பேரில், மஹாவ பொலிஸார் குழந்தையை நிகவெரட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும், குழந்தையின் தாய் மற்றும் தந்தை இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




