நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக அதிகளவில் நீர் அருந்துவதை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறுவர்கள் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். உடலுக்கு அதிக வெப்பம் உணரப்படுவதை குறைப்பதற்கு அதிக நீர் அருந்துவது உதவியளிக்கும்.
நாட்டில் நிலவும் வெப்பமான நிலையில் சில தினங்களுக்கு நீடிக்குமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.




