கல்வி சீர்திருத்தம் மாணவர்கள் மீதான சுமையை அதிகரிக்கும் – ஜோசப் ஸ்டாலின்

0
54
Education reforms to increase burden on students - Joseph Stalin

2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் மாணவர்கள் மீதான சுமையை மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார். 
 
தற்போதைய கல்வி முறை மாணவர்களுக்கு மிகவும் சுமையாகியுள்ளமையால், அனைத்து கல்விசார் தொழிற்சங்கங்களும் தொடர்ந்து சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. 
 
எனினும், உண்மையான மாற்றத்திற்குப் பதிலாக, அரசாங்கம் பழைய கொள்கைகளை மீண்டும் தொகுத்து புதிய சீர்திருத்தங்களாக முன்வைப்பதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
இந்தநிலையில், மாற்றங்களைச் செயற்படுத்துவதற்கு முன்னர் கல்வி நிபுணர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போன்ற தொடர்புடைய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
பாடசாலை நேரத்தை மதியம் 1:30 முதல் மதியம் 2 மணி வரை நீடிக்கும் தீர்மானம் எந்தவித ஆலோசனையும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
தற்போது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் முதலில் ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது அவை நிராகரிக்கப்பட்டதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here