அநுராதபுரம் பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் 56 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 06 கிலோ 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




